இரண்டாம் தந்திரத்தில் புராண நூற்பொருள்களையும், அவற்றோடு இயைபுடைய சிலவற்றையும் கூறிய நாயனார், அதன் பின் சாத்திரப் பொருள்களைக் கூறுவாராய், அதுதான் தவமும் ஞானமும் என்று இருவகைப்படுதலானும், அவ்விரண்டனுள் முன் நிகழ்வது தவமே யாதலாலும் அதனுட் சிறந்த யோகத்தினை மூன்றாம் தந்திரத்தால் உணர்த்துகின்றார்.
யோகப் பொருளை முதற்கண் நான்கு திருமந்திரங்களால் தொகுத்து உணர்த்துகின்றார்.